காமராஜரின் இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள் - kamaraj photos





காமராஜர் தன்னுடைய தங்கை மகன் திருமண விழாவில் பங்கேற்ற போது எடுத்த படங்கள். நாடார் திருமணங்களில் தாய்மாமன் சாஸ்திரம் என்று ஒரு சடங்கு செய்வார்கள், பெண்ணுடைய தாய்மாமனும் மாப்பிள்ளையுடைய தாய்மாமனும் இந்த சடங்கில் பங்கேற்பர். தன் தங்கை மகனுக்காக காமராஜர் தாய்மாமன் சடங்கில் பங்கெடுத்த போது எடுத்த படங்கள்.

காமராஜர் குடும்பத்தில் அதிக பற்று இல்லாதவர் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. காமராஜர் சிறுவயதிலேயே விதவையான தன் தங்கையையும், தங்கையின் நான்கு பிள்ளைகளையும், தன் தாயையும் அவர் குறையின்றி பார்த்து கொண்டார். தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். தன் பதவியை தன் குடும்ப உறுப்பினர்கள் கூட தவறாக பயன்படுத்திவிட கூடாது என்ற உறுதியுடன் இருந்தார்.

2 comments:

நாகு (Nagu) said...

கர்மவீரரின் அரிய புகைப்படங்களுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அரிய படங்களே!
மிக்க நன்றி

Post a Comment