its so moving to see (rather recall) the news items on this great leader's death! Kamaraj is one of the very few leaders that I have ever respected! ..ram
என் மனம் கணத்து விட்டது.. உண்மையில் வாழ்ந்தால் இவர் போல் வாழ வேண்டும்.. இறந்தால் பெயர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... கண்ணீருடன் வினோத்..
காமராசர் இன்றைய அரசியலுக்கு ஓர் மின்மினி பூச்சி.... இது என் எண்ணமன்று... இன்றைய அரசியல் போக்கு... ஆனால் இன்றைய கல்வி நிலை....? அன்று அறிவு பசி மட்டும்மல்ல வயிற்று பசியையும் போக்கினாய்.... இன்று - கல்வியை போக்கி... கலவியை வளர்தது யார்...? அரசியல் சூழ்சிக்கு... வேலி போடுவது யார்...:? வாக்குக்கு விலைபேசி வாழ்க்கையை விற்றவர் யார்...? நென்சம் பொறுக்குமா... பாரதி ஒருவேளை நீ வாழ்ந்திருந்தால்... இளைஞர்களே நீங்கள் இளைய பாரதியா....? இல்லை பார்( உலகின் ) ரதி பின்னால் ஒழிபவரா?
17 comments:
its so moving to see (rather recall) the news items on this great leader's death! Kamaraj is one of the very few leaders that I have ever respected!
..ram
எனக்கு படம் தெரியவில்லெஇ (அலுவலில் ப்ராக்ஸி பிரச்சினை). மெயில் அனுப்புவீற்களா?
srinivasank77@gmail.com, haiseenu2000@yahoo.com
I admired, really heart touching
regards
sivaganesh
Dear Politicians kindly read this Great Leader's Life Once before you start your Politics
உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தை
குழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை
அன்னையைக் கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர் காமராசர்
நானிலம் போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர் காமராசர்
கல்விப் புரட்சி பசுமைப் புரட்சி தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த புரட்சியாளர் காமராசர்
அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் காமராசர்
முதல்வர் பதவியில் பெருமைகள்சேர்த்து முத்திரைப் பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர்
கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர்
கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த சொத்து
கல்வி கற்பித்ததால் கற்றவர்கள் யாவரும் சொத்து
குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர்
உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !
தென்னாட்டுக் காந்தி காமராசர்
கவிஞர் இரா. இரவி, மதுரை
விருதுநகரில் பிறந்த விருதுக்காரர்
விவேகத்தில் சிறந்த திறமைக்காரர்
கிராமங்கள் முழுக்கக் கால்பதித்தவர்
மனிதநேயத்தின் மறுஉருவமாக நின்றவர்
தன்னிகரில்லாத் தமிழகத்தை
உயர்த்திக்காட்டியவர்
தரணியில் நேருவின்
பாராட்டைப் பெற்றவர்
தன்னலமற்ற தலைவராக வாழ்ந்தவர்
பொதுநலத்தையே
குறிக்கோளாக்க் கொண்டவர்
ஏழைப் பங்காளன் என்பதற்கு
இலக்கணமானவர்
ஏழைகளுக்கு
இலவசக்கல்வி நல்கியவர்
எளியவருக்கு
மதிய உணவு வழங்கியவர்
கற்றவர்கள் ஏழு என்பதை
முப்பத்தேழாக்கியவர்
கல்விக்கூடங்கள்
இருபத்தேழாயிரம் திறந்தவர்
விள்க்கேற்றி அறிவொளி
தந்த முதல்வர்
ஏழைகளின்
உயர்வுக்குச் சிந்தித்தவர்
வாழ்க்கையையே
தியாகம் செய்தவர்
கதராடை அணிந்த
கறுப்புச் சட்டைக்காரர்
கொண்ட கொள்கையில் பிடிப்புக்காரர்
இலட்சங்களுக்காக இலட்சியத்தை விடாதவர்
கோடிகளுக்காகக் கொள்கையைத் துறக்காதவர்
தென்னாட்டு காந்தியாக விளங்கியவர்
சுயமரியாதை எங்கும் இழக்காதவர்
சுதந்திரத்திற்காகப் போராடிய புரட்சிக்காரர்
பணத்தாசை பதவியாசை இல்லாதவர்
பகைவர்களும் பாராட்டும் பண்பாளர்
படிக்காத மேதை காமராசர்
கர்மவீரர் காமராசர் - (கவிஞர். இரா.ரவி)
முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும்
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று
வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று
இலவசக் கல்வி வழங்கிட அரசுப்பள்ளிகளை
எங்கும் தாராளமாகத்திறந்து வைத்தாய் அன்று
அரசுப்பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகள்
அளவின்றி தாராளக் கொள்ளைக்கு வழிவகுத்தனர் இன்று
வெள்ளையனே வெளியேறு என்று வீரகோசமிட்டு
வாள் ஏந்திப் போராடி வரலாறு படைத்தாய் அன்று
வெள்ளையனே வருக கொள்ளையடித்துச் செல்க
விரிக்கின்றனர் ரத்தினக்கம்பளம் இன்று
விவசாயத்தின் மேன்மையை உணர்ந்து நீ
விணாய் தரிசாக இருந்தவற்றை விளைநிலமாய் மாற்றினாய் அன்று
விளை நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
வாரி வாரி வழங்கி கையூட்டு பெறுகின்றனர் இன்று
தொழிற்சாலைகள் புதியன பல தொடங்கி நாட்டில்
தொழிற் புரட்சியைத் தொடங்கி வைத்தாய் அன்று
உள்ளுர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு
உலகத் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர் இன்று
அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவருக்கும் அன்போடு கற்பித்தாய் நீ அன்று
அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவரிடமும் காணாமல் போனது இன்று
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
MY hero.
Naadaiye Veedaaga Karuthi..
Matrorukkaga Vaazhthu Matraatha Sirappudaiya..
Kalviye Vaazhvaatharam Ena Vaazhnthu Aatharam Kaattiya..
ArumPerum Thalaivan..
Tamizhagathin Thalaimagan..
Thann Thaainaattin Porulaatharathirrkum, Arivaatharathirrkum Vithitta Vithagar..
Kaamarajar.
Marakkaathu Ummai Thamizhagam,, Marukkaathu Ithai Puviyugam.
கிங் மேக்கர்
we are proud of him,he is Tamilan,I missed my life with his porkkalam
Real King
kamaraj valka
என் மனம் கணத்து விட்டது.. உண்மையில் வாழ்ந்தால் இவர் போல் வாழ வேண்டும்.. இறந்தால் பெயர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... கண்ணீருடன் வினோத்..
I have no words
மிக்க நன்றி
காமராசரின் நினைவலைகளைப் போற்றுவோம்
காமராசர்
இன்றைய அரசியலுக்கு
ஓர் மின்மினி பூச்சி....
இது
என் எண்ணமன்று...
இன்றைய அரசியல் போக்கு...
ஆனால்
இன்றைய கல்வி நிலை....?
அன்று
அறிவு பசி மட்டும்மல்ல
வயிற்று பசியையும் போக்கினாய்....
இன்று -
கல்வியை போக்கி...
கலவியை வளர்தது யார்...?
அரசியல் சூழ்சிக்கு...
வேலி போடுவது யார்...:?
வாக்குக்கு விலைபேசி
வாழ்க்கையை விற்றவர் யார்...?
நென்சம் பொறுக்குமா... பாரதி
ஒருவேளை நீ வாழ்ந்திருந்தால்...
இளைஞர்களே நீங்கள்
இளைய பாரதியா....? இல்லை
பார்( உலகின் ) ரதி பின்னால் ஒழிபவரா?
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Post a Comment